000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a வராகமூர்த்தி |
300 |
: |
_ _ |a வைணவம் |
340 |
: |
_ _ |a மரம் |
500 |
: |
_ _ |a வராக அவதாரம் என்பது பன்றியின் வடிவமும் மனித உடலும் இணைந்த விஷ்ணுவின் மூன்றாவது அவதாரக் கோலமாகும். சதபத பிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களில் இவ்வவதாரத்தின் தோற்றப் பின்னணி விளக்கப்பட்டுள்ளது. பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியில் பல்வேறு பாவச்செயல்களைச் செய்து வந்தான். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பூமியானது கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொணர்வதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். வராகப் படிமம் என்பது ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாக அதன் வடிவத்திற்கேற்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. வராகமூர்த்தி பத்மபீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். பன்றியின் முகங்கொண்டவராய், மேலிரு கைகளில் சங்கு சக்கரத்தினைப் பற்றி, கீழிரு கைகள் அபய வரத முத்திரைகளைக் காட்ட அமர்ந்துள்ளார். கிரீட மகுடம் தலையை அலங்கரிக்கிறது. ஆடையணிகள் நன்கு விளங்குகின்றன. |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. |
653 |
: |
_ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, மானிடவியல் துறை, சிற்பங்கள், கலைப்பொருள், மரச்சிற்பங்கள், கலைவடிவங்கள், மரப்பலகைச் சிற்பங்கள் |
700 |
: |
_ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாத்பத்ரி |d அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் |
905 |
: |
_ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
995 |
: |
_ _ |a TVA_SCL_001197 |
barcode |
: |
TVA_SCL_001197 |
book category |
: |
மரச்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001197_மைய-அருங்காட்சியகம்-சென்னை_வராகமூர்த்தி-001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_001197_மைய-அருங்காட்சியகம்-சென்னை_வராகமூர்த்தி-001.jpg
|